அனிதா சம்பத் மற்றும் சுரேஷ் சக்ரவர்த்தி சண்டை கூட முடிவுக்கு வந்துவிட்டது. அனால் இந்த ரியோ ராஜ் மற்றும் சுரேஷ் சக்ரவர்த்தி இடையிலான மிகப்பெரிய பஞ்சாயத்து இன்னும் முடிவுக்கு வந்தபாடில்லை. பேஷன் ஷோவில் தொடங்கி, குரூப்பிஸம் தாண்டி மேலும் தற்போது கேப்டன் டாஸ்க்கிலும் இந்த பஞ்சாயத்து தொடர்கிறது.
சுரேஷ் சக்ரவர்த்தி, ரியோ ராஜுடன் அமர்ந்து பேசியதற்கு பின் அந்த விஷயத்தை பற்றி அதோடு விட்டு விட்டார். ஆனால் ரியோ அப்படி விடுவதாக தெரியவில்லை போல. நேற்று பிக் பாஸ் டாஸ்க்கிற்கு முன் இந்த வீட்டில் அணைத்து விசயங்களிலும் முழு ஈடுபாட்டுடன் இருக்கும் நபரை தேர்வு செய்யுங்கள் என்று பிக்பாஸ் கூற நடிகை கேப்ரியலா, சுரேஷ் சக்ரவர்த்தி பெயரை முன்மொழிந்தார். இதைப்பார்த்த ரியோ ராஜ் அதற்கு ஒரு பாடமே எடுத்து சுரேஷை கழட்டி விட வைத்தார்.
அதனை தொடர்ந்து வீட்டில் மிகவும் அமைதியாக இருந்து வந்த நபரை தேர்வு செய்யுமாறு பிக்பாஸ் கூற அப்போதும் ரியோ ராஜ் சுரேஷ் சக்ரவர்த்தி பெயரை சொல்ல விடாமல் அதற்கும் ஒரு லெக்சர் குடுத்தார். இதைப் பார்த்த பிக் பாஸ் ரசிகர்கள் ரியோ ராஜ் உங்களுக்கு ஏன் இந்த வேலை? நாட்கள் செல்ல செல்ல சுரேஷ் சக்ரவர்த்தி மேல உங்களோட கோபம் அதிகமாகிட்டே போகுது ஏன்? என்று கேள்விகளை கேட்டு அவரை வறுத்தெடுத்து வருகின்றனர் சமூக ஊடகங்களில்.
இந்த வாரம் ஃபுல்லா நல்லா பெர்ஃபார்ம் பண்ணவங்கள்ல சிலர் சுரேஷ் பேரை சொன்னதும் ரியோ அதை அப்ஜெக்ட் பண்ணதுலவே ரியோக்கு சுரேஷ் மேல உள்ள காண்டு தெரிஞ்சுது. ரியோ நாளுக்கு நாள் ரொம்பவே வெறுக்கப்படற ஆளா ஆயிட்டு இருக்காப்டி. #IHateRio#SureshChakravarthi#BiggBossTamil4 #BiggBoss4Tamil
— SJR (@sjr_coimbatore) October 16, 2020
Kevalama yaaru yosipaanga na adhu namma #biggbosstamil dhaan.Thooki sumandha #balajimurugadoss captain illaiyaam… Summa ukandha #Rio captain aam…Makku Task team🤦🏻♂️#Biggbosstamil4— Imadh (@MSimath) October 16, 2020